அஞ்சாதே இயேசு ரட்சகர்
ஆத்துமத்துயர் நீக்க வல்லவர்
அனுபல்லவி
வஞ்சமே மிஞ்ச்சுமா பஞ்சபாதகன் நானென்று. – அஞ்
ரணங்கள்
1.திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்கு
அருள் பெற்றான் என வேதஞ் சொல்வதை
ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல் – அஞ்
2.வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்
துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே
தூதர் சங்கமும் களிப்பதாலே.- அஞ்
3. மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்
வாய்ப்புடன் மனம் மகிழும் போலே
மானுவேலுனைத் தழுவலாலே.- அஞ்
4.தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்
துயரடை பாவி யொருவன் மீதினில்
எண்ணருந் தூதர் மகிழ்வத