சரணங்கள்
1. அந்தோ சிலுவைப் பவனி பார் – நமது
ஆண்டவர் படுந்துயர் ஆறுமோ – நாம்
அழுதாலுந்தான் தீருமோ – குரு
சன்றி மீட்பு ஒப்பேறுமா – சகி சகி
2. தோளில் பாரம் அழுந்தவே – அவர்
தேய்ந்து கீழே விழுகிறார் – ஐயோ
தூக்கிவிடுவார் இல்லையோ – மா
தோஷி என்னால் இத்தொல்லையோ – சகி சகி
3. தூக்கென்றவரை அதட்டுறான் – ஒரு
தோஷி முறுக்கிப் பிதற்றுறான் – அங்கே
துடுக்காய் சவுக்கை சுழற்றுறான் – ஒருவன்
தொந்தரை செய்தே அலட்டுறான் – சகி சகி
4. மெல்ல இயேசு நடக்கிறார் – வேர்த்து
மெய் சோர்ந் துடைந்து சடைக்கிறார் – தம்மைப்
பலியாய் விருப்புடன் படைக்கிறார் – எந்தன்
பாவக் கடன்களை அடைக்கிறார் – சகி சகி
5. மாதா ஏங்கித் தேம்புறாள் – நன