அபிஷேக ஒலிவ மரம்
உம் ஆலயத்தில் நடப்பட்டவன்
உம் சமூகத்தில் வாழ்கின்றவன்
உம் அன்பையே நம்புவேன்
உம் வசனம் தான் பசியாற்றும் உணவு
உம் பிரசன்னம் தான் தாகம் தீர்க்கும் தண்ணீர்
நீரே என் வெளிச்சமும் மீட்புமானீர்
நீரே என் ஜீவனின் பெலனானீர்
என்னைக் காப்பாற்றும் காவலர் நீரே
அயராது நீர் பாய்ச்சுவீரே
என் தேவைகள் யாவையும் சந்திப்பவரே
எந்த சேதமும் இன்றி காப்பவர்
பெலன் தரும் புகலிடம் நீரே
உம்மில் வேரூன்ற கிருபை செய்தீரே
மலர்ந்திடுவேன் நான் கனி கொடுப்பேன்
இந்த உலகமெங்கும் நான்
பலன் கொடுப்பேன்
--apishaeka oliva maram--