என் பெலனாக கிறிஸ்து இருப்பதினால்
எந்த பயமும் எனக்கில்லையே
என் வலப்பக்கத்தில்
அவர் துணை நிற்பதால்
நான் ஜெயம் பெற்று எழும்பிடுவேன்
எல்ஷடாய் என் தெய்வமே
எல்ரோயீ என் தகப்பனே
யெகோவா என் ராஜனே
யெகோவா நிசியாய் எழுந்தருளி
சத்துருவை துரத்தி வெற்றி தந்தீரே
என் கண்ணீரின் பள்ளத்தாக்கில்
கொண்டாட்டம் உண்டாக்கினீர்
எரிகின்ற சூளைக்குள் எறியப்பட்டும்
எரியாமல், புகையாமல் காப்பாற்றினீர்
கர்த்தரே தெய்வமென்று
கைத்தட்டி கொண்டாடுவேன்
--Elshaddai--