இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா (2)
தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால் (2)
நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்
1. ஆபத்து நாளில் அனுகூலமான
துணையுமானீரே நன்றி ஐயா (2) --- நன்றி நன்றி
2. உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா (2) --- நன்றி நன்றி
3. அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயன்படச் செய்தீரே நன்றி ஐயா (2) --- நன்றி நன்றி
4. கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா (2) --- நன்றி நன்றி
--Ithuvarai nadathi kuraivindri kaathu--