உம் அன்பு ஒன்றே | um anpu onte

Tamil Christian Song

உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன் உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன் அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன் வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே உள்ளம் பாரத்தாலே சிதறியதே உம் பாசக்கரம் நீட்டினீரே அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே என் விண்ணப்பத்தை கேட்டவரே என் கண்ணீரை காண்பவரே உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர் அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே --um anpu onte pothum yaesappaa--
Tamil